Cover Image

Monday, 26 October 2015

"பாவிப்பயல்."

பக்கம் பக்கமாய் எழுத பக்குவம் இன்னும் இல்லை
நறுக்கெனச்சொல்ல தந்திரமும் இல்லை

சறுக்குது வார்த்தைவங்கி மெருக்கினால் அர்த்தம் தேடி
கோதாரி யோசனையும் அலையுது வாசனை வேண்டி

நெளிந்து மடங்கி சமாளிக்க மேடையேறினால்
பந்தலும் பந்தியும் சனக்கூட்டமும் மெச்சுது மேலோங்கி

வேண்டுங்கோ இவனுக்காக!!

இவனோடு நான்,
எம். யூ. உஸாமா.

Thursday, 6 August 2015

"யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமையால், யாழ் மாவட்டத்துக்கென விசேட வாக்குச்சாவடிகள் எதுவும் புத்தளத்தில் வைக்கப்படவில்லை." - Sonakar.Com

"யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமையால், யாழ் மாவட்டத்துக்கென விசேட வாக்குச்சாவடிகள் எதுவும் புத்தளத்தில் வைக்கப்படவில்லை." - Sonakar.Com

இது என்னை பலவாறும் சிந்திக்கத்தோன்றுகிறது. 

ஏன் இவர்கள் விண்ணப்பிக்கவில்லை? இதன் பின்னணி என்னவாக இருக்கும்?

யாழ்ப்பாணத்திலாவது இவர்கள் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனரா? 
இல்லையேல்
வாக்களிப்பதை வீணென கருத்துமளவுக்கு மனதளவில் வேட்பாளர்கள் மீது ம்பிக்கையிழந்துள்ளனரா? 
இல்லையேல்
ஏதேனும் காரணமாக இவர்களது விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளனவா?
இல்லையேல்
மூளைச்சலவையோ, அச்சமூட்டியோ விண்ணப்பிப்பதை யாரும் தடுத்திருக்கலாமா? 
ஒன்றும் இல்லையேல்
வர்கள் எல்லோரும் தாங்கள் வாழும் மாவட்டத்துக்காக வாக்களிக்கவெனினும் விண்ணப்பித்துள்ளனரா? 

ஏனெனில் இந்தச்செய்தியிலேயே 02 முல்லைத்தீவு வாக்காளர்களுக்காக பு / நுரைச்சோலை ம. வித்தியாலத்தில் வாக்குச்சாவடி நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் ஒருவர் கூட புத்தளத்தில் வாக்களிக்க கோரவில்லை என்பதை ஒருமித்து நிற்கிறது. 

மூலப்பதிவு: http://www.sonakar.com/?p=58977

புதிர்களோடு நான் எம்.யூ.உஸாமா. 




Friday, 14 March 2014

மனதின் நிழலில்.. - நானும், நான் காணும் சமுகமும்.

என்னதான் இருந்தாலும்
பிறந்து, வளர்ந்த சூழல்
கூடவே இருந்த குடுப்பத்தினர், நண்பர்கள்
அயலவர்கள், உறவினர்கள் - என
அந்த காலப்பொழுது
இன்னும் நினைவுகளாக வந்து
உணர்வுகளில் அசைபோடுவதற்கு
மறப்பதில்லை.

பல ஆசைகள், சில தேவைகள் - அங்குமிங்கும்
என்னை பயணிக்க விட்டாலும்
என் மனம் உலா வருவதென்னமோ
தாய்நாட்டில் தான்!

தாயே! - உன்னை
சற்றுப் பிரிந்ததும் புரிந்தது என் வெறுமை. - ஆக
இருந்தது யாவும் பகட்டுப் பெருமை.

உணர்கிறேன் மீண்டும் பிறந்ததாய் - இங்கு
ஓர் அநாதையாய்!

இக்கட்டான சில தருணங்கள் என்னை தாலாட்டுது, பலவாறும் யோசனைகள் என்னை ஆட்டிப்போடுது, கடமைகளும் கண்முன்னே வந்து இடம்பிடிச்சிருக்கு, காலங்களும் நன்றாகவே சுழண்டோடுது!

இவற்றுக்கிடையில் கிடைக்கும் விதைநிலங்களும், விதைக்கும் நடுவிதைகளும் சரியாகவே பயன்படுவதாக நம்பி, பயணிக்கிறேன் - வரும் போகத்தையும்  நோக்கி! 

"நீருபிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள், சவாலான பொழுதுகளாக அமைவது அனுபவத்தை தருவதற்குத் தான்!" என்று அப்பா சொல்வதை அடிக்கடி மீட்டுகின்றேன். - அனுபவிக்கும் போது. பயில்வதற்கான வாய்ப்புகள் அமைவதை ஆரோக்கியமானதாகவே உணர்கின்றேன். இவ்வாறு ஆர்வமானதாக கல்வி / பணி சார்ந்த பயணம் (Journey through learning, and work)  எனக்கு அமைந்தாலும், நான் காணும் மக்கள், என்னைச் சூழவுள்ள சமூகம் என்னை வியக்க வைக்கின்றன. (உலகுக்கு இது பழகிப்போன கிழட்டுக் கதையாயினும், என் உணர்வுகளால் இவை அந்நியமானதாகவும், புதியதாகவும் அசாதாரண நிலையிலேயே உணரப்படுகிறது.)

"இரை தேடியுலாவும் குஞ்ஞீன்ர பறவைகள் அதிகமாகவே இருந்தும்  கூட, குஞ்சை மறந்து (மறைத்து) வாழும் பறவைகளும் வாழுதிங்கு!

தன் குடும்பத்தினர் வாழ்வதற்காக சுயநிலை மறைத்து (மறந்து) பலர் இங்கு வாழ்கிறார்கள், பெருமிதத்தோடு! - கண்டு பூரிப்படைகிறேன். 
சுய(த்)தேவைகளுக்காக குடும்பத்தினரை மறந்து (மறைத்து) சிலர் இங்கு வாழ்கிறார்கள், வெட்கம் இழந்து! - கண்டு சஞ்சலப்படுகிறேன்.

வீடெனச் சொல்ல இடமேதும்  உண்டோ?   
இடமுண்டு! மனமும் உண்டு, மணமின்றி!
வாழும் கணம் கனமாகவேயுண்டு! - ஆக
எங்குண்டு வீடு?

தொடரும் எந்தன் அலட்டல்கள், இன்னும் சில காலடிகளோடு மழலையின் சுவடாய் பலர் கேட்கும் வண்ணம் இந்த பதிவுலகில்! - மற்றுமொரு சுவடோடு வரும் வரை. 

நன்றி.
எம்.யூ. உஸாமா. 

 ---------------------------------------------------------------------.--------------------------------------------------------------------
எழுத்தில் இருப்பது.. (எழுதி முடியாது!) 
மரைக்காக வைத்த அம்பு குறிதவறியது குண்டடியில் மனம் குன்றிய தம்பி குன்றடியில் அமர்ந்ததனாலோ? - மரத்திலிருந்த வேடன் மதி தவறியது  மரையின் வேகத்தைக்கண்டோ?
கணத்திலே மரணத்தைக்கண்டது வேடனா? தம்பியா?
 ---------------------------------------------------------------------------------------------------------------

Thursday, 21 June 2012

அரும்பு - ஒரு கன்னிப்பதிவு!


நான் எழுதும் அரும்பு வார்த்தைகள் இவை..

ஆமாம், சிறுபிள்ளை கூறும் முதல் வார்த்தை 'அம்மா' போலவும், அது எழுதும் அகரம் போலவும் இருக்கு..

நிச்சயமாக சந்தோசப்படுகிறேன், ஆனாலும் நிறைய பயப்படுகிறேன். ஏனெனில் உங்களின் நேரம் இந்த கிறுக்கல்களுடன் செலவிடப்படுகிறது, ஒரு வாசகனாய்.

என்மனதை பகிர்ந்து கொள்ள, என் புலம்பல்களுக்கு சில காதுகள் இருப்பதைப்போல ஓர் நிறைவு என்னோடு ஒட்டிக்கொள்கிறது. என்னுள்ளே உணரப்படும் உணர்வுகளின் படிமமாய் கிடக்கும் இந்த வலைப்பக்கம்...

தொடரும் எந்தன் அலட்டல்கள், இன்னும் சில காலடிகளோடு மழலையின் சுவடாய் பலர் கேட்கும் வண்ணம் இந்த பதிவுலகில்..! - மற்றுமொரு சுவடோடு வரும் வரை.

நன்றிகளுடன் உங்கள் வீட்டுப்பிள்ளை,
எம்.யூ. உஸாமா.


Sunday, 11 January 2009

I'm a Blogger! O.o - "TheGalleryYou!" Launch!


Hello there! :')

I'm here with a quote, something close to my heart, this's always been on my granny's lips when she advices me. I share that with you, and It time to say, that I have a wonderful grandparents. <3

"Just Because Something is Difficult Doesn't Mean You Shouldn't Try. It Means You Should Try Just Harder."

"Life has No Blessing; Like a Prudent Friend"


 With Love,
 MU.Usama.
Related Posts Plugin for WordPress, Blogger...